முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
நூற்செய்தி
[சூத்திர எண்]
தெய்வ வணக்கமும் செயப்படுபொருளும் கூறுவன் என்பது.
.... 1
அறம்பொருள் இன்பம் வீடு என்ற உறுதிப்பொருள் நான்கனுள் மனம்
மொழிகளைக் கடந்த வீடு பேறு நீங்கலான ஏனைய மூன்றும்,
தமிழ்ச் செய்யுட்களில் அகம் எனவும், புறம் எனவும் வழங்கப்படும் என்பது
.... 2
அகமாவது அறம் பொருள் இன்பம் என்ற உறுதிப் பொருள் மூன்றனுள்,
உள்ளத்தான் உணரப்படும் இன்பமாகிய காம ஒழுக்கம் என்பது.
.... 3
அகம், கைக்கிளை ஐந்திணை பெருந்திணை என எழுவகைப்படும்
என்பது.
.... 4
கைக்கிளைஒருதலைக்காமம்; ஐந்திணை அன்புடைக்காமம்; பெருந்திணை
பொருந்தாக்காமம் என்பது
.... 5
அகப்பொருள், புனைந்துரை உலகியல் என்ற இரண்டையும் சேர்த்துப்
பண்டை மரபு வழுவாமல் கூறப்படும் என்பது.
.... 6
குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்பன ஐவகைத்
திணைகளுக்கும் உரிய பெயராம் என்பது.
.... 7
ஐந்திணைப்பொருள்கள், முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள்
என மூவகைப்படும் என்பது
.... 8
முதற்பொருள், நிலன் எனவும் பொழுது எனவும் இரு வகைப்படும்
என்பது
.... 9
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்