பக்கம் எண் :

உரைமேற்கோள் நூற்பாக்கள்


 

 10. நடுவண் ஐந்திணை நடுவணது ஒழியப்
      படுதிரை வையம் பாத்திய பண்பே                  தொல்.பொ. 2

 53. கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
     புணர்ந்துஉடன் போகிய காலை யான                         143

 113. முன்னைய மூன்றும் கைக்கிளைக் குறிப்பே
     பின்னைய நான்கும் பெருந்திணை பெறுமே.                    105

 117. சிறந்துழி ஐயம் சிறந்தது என்ப
     இழிந்துழி இழிபே சுட்ட லான                                94

 135. நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும்
     செய்வினை மறைப்பினும் செலவினும் பயில்வினும்
     புணர்ச்சி எதிர்ப்பாடு உள்ளுறுத்து வரூஉம்
     உணர்ச்சி ஏழினும் உணர்ந்த பின்றை                          114

     ஆங்குஉணர்ந்து அல்லது கிழவோன் தேஎத்துத்
     தான்குறை உறுதல் தோழிக்கு இல்லை.                 இறை.கள. 8

     நாணவும் நடுங்கவும் நாடாள் தோழி
     காணுங் காலைத் தலைமகள் தேஎத்து. பழைய நூற்பா.

     காமப் புணர்ச்சியும் இடந்தலைப் படலும்
     பாங்கொடு தழாஅலும் தோழியின் புணர்வும்என்று
     ஆங்கநால் வகையும் அடைந்த காமமொடு
     முறையான் மொழிந்தசின் மறையோர் ஆறே        தொல். பொ. 498

     புணர்ந்த பின்றை ஆங்கனம் ஒழுகாது
     பணிந்த மொழியால் தோழி தேஎத்து
     இரந்துகுறை யுறுதலும் கிழவோன் மேற்றே             இறை. கள. 5