பக்கம் எண் :

 அகத்திணையியல்-நூற்பா-135                              361


 

     தோழி தனித்துழித் தலைவன் குறையுற்று மதியுடம்படுத்தல்
 வந்துழிக்காண்க. மற்று இவற்றையே ஒருவரைக்கூறும் பன்மைக்கிளவி ஆக்கி
 உதாரணம் ஆக்குவதும் ஒன்று.

     கையுறை ஏந்திநின்று அவ்வகை வினாவுழி எதிர்மொழி கொடுத்தல்:

 "உடுக்கும் கலைஇன்றி இங்குஒரு நாளும் ஒருவர்வந்து
  கெடுக்கும் கலைகண்டு அறிகிலம் யாம்கிளர் வான்உலகை
  மடுக்கும் கலைமதி துஞ்சும்அஞ் சாரல் அருவிவெற்பா
  தொடுக்கும்கலைஇனிவேறும்உண்டாயினும்சொல்லுகவே".

அம்பி 91

 எனவும்,

     [வானை அடைந்து உச்சியில் உள்ள மதி தங்கும் மலைச்சாரலில்
 அருவிபாயும் வெற்பனே! நாங்கள் உடுக்கும் கலையை (ஆடையை)
 அன்றிப் பிறர் இப்புனத்தருகே கெடுத்த கலையை (மானை) அறியோம். உன்
 அறிவினால் இனித்தொடுக்கும் வினாக்கள் உளவேல் சொல்லுக.]

     இறைவனை நகுதல்:

 "மின்னே தழைகொண்டு வேழம்எய் தார்அந்த வேழம்வந்து
  பின்னே இணைபிரி யும்பிணை யானது பேசில்இன்னம்
  கொன்னே உகளும் குறுமுயல் ஆகவும் கூடும்கொல்லோ
  என்னே உலகில் இவரைஒப் பார்இல்லை ஏவினுக்கே".

அம்பி. 92

 எனவும்,

     [தலைவியே! கையில் தழையைக்கொண்டு இவர் யானையை எய்தார்.
 அந்த யானை பின் இணையைப் பிரிந்த

       46