பக்கம் எண் :

 அகத்திணையியல்-நூற்பா-137                              367


 

     இறைவிக்கு அவன்குறை உணர்த்தலும்37 இறைவி
     அறியாள் போன்று குறியாள் கூறலும்38
     பாங்கி இறையோன் கண்டமை பகர்தலும்39
     பாங்கியைத் தலைவி மறைத்தலும்40 பாங்கி
     என்னை மறைப்பது என்எனத் தழாஅலும்41
     கையுறை புகழ்வும்42 என்று இவ்விரு மூன்றும்;
     தோழி கிழவோன் துயர்நிலை கிளத்தலும்43
     மறுத்தற்கு அருமை மாட்டலும்44 தலைவன்
     குறிப்பு வேறாக நெறிப்படக் கூறலும்45
     தலைவியை முனிதலும்46 தலைவி பாங்கி
     தன்னை முனிதலும்47 தன்கைக் கையுறை
     ஏற்றலும்48 எனமுறை சாற்றிய ஆறும்;
     இறைவி கையுறை ஏற்றமை பாங்கி
     இறைவற்கு உணர்த்தலும்49 குறியிடம் கூறலும்50
     குறியிடத்து இறைவியைக் கொண்டு சேறலும்51
     குறியிடத்து உய்த்து நீங்கலும்52 இறையோன்
     இடத்துஎதிர்ப் படுதலும்53 இயைதலும்54 புகழ்தலும்55
     விடுத்தலும்56 பாங்கி மெல்லியல் சார்ந்து
     கையுறை காட்டலும்57 மைஉறை கண்ணியைப்
     பாங்கில் கூட்டலும்58 நீங்கித் தலைவற்கு
     ஓம்படை சாற்றலும்59 உலகியல் மேம்பட
     விருந்து விலக்கலும்60 பெருந்தகை விருந்துஇறை
     விரும்பலும்61 எனமுறை தெரிந்தபன் மூன்றோடு
     அற்றம்இல் சிறப்பின்இவ் வறுபத் தொன்றும்
     குற்றம்இல் பாங்கியின் கூட்டத்து விரியே.

     இது பாங்கியிற்கூட்டத்து விரி இத்துணைப் பகுதித்து என்கின்றது.

     இ-ள் தலைவன் உட்கோள் சாற்றல் முதலாகப் பாங்கி ஆற்றுவித்தல்
 ஈறாகச் சொல்லப்பட்ட இருபதும், இரந்து குறைபெறாது வருந்திய கிழவோன்
 மடலே பொருள் எனமதித்தல் முதலாகக் கொண்டுநிலைகூறல் ஈறாகச்
 சொல்லப் பட்ட ஏழும்,