பக்கம் எண் :

4 இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


மலை பாலை காடு வயல் கடல், இவைசேர்ந்த இடங்கள் ஆகியவை  
  முறையே குறிஞ்சி முதலிய ஐந்திணைக்கும் உரிய நிலங்களாம் என்பது ... 10
     
பொழுது, பெரும்பொழுது சிறுபொழுது என இருவகைப்படும் என்பது  ... 11
     
கார் கூதிர் முன்பனி பின்பனி இளவேனில் முதுவேனில் என்ற ஆறு  
  பெரும்பொழுதுகளும், ஆவணி தொடங்கி இரண்டிரண்டு திங்கள் அளவைய என்பது ... 12
     
மாலை யாமம் வைகறை காலை நண்பகல் பிற்பகல் எனச் சிறுபொழுது  
  அறுவகைப்படும் என்பது ... 13
     
கூதிர் முன்பனி யாமம் குறிஞ்சிக்கும், வேனில் பின்பனி நண்பகல்  
  பாலைக்கும், காரும் மாலையும் முல்லைக்கும், பெரும்பொழுதுவரையறையின்றி, வைகலும் விடியலும் மருதத்திற்கும், பிற்பகல் நெய்தற்கும் உரியவாம் என்பது ... 14
     
தெய்வம், தலைமக்கள், பொதுமக்கள், புள், விலங்கு, ஊர், நீர், பூ, மரம்,  
  உணவு, பறை, யாழ், பண், தொழில் என்ற பதினான்கும் கருப்பொருள் என்பது. ... 15
     
குறிஞ்சித்திணைக்குரிய கருப்பொருள்கள் இவை என்பது ...16
பாலைத்திணைக்குரிய கருப்பொருள்கள் இவை என்பது ...17
முல்லைத்திணைக்குரிய கருப்பொருள்கள் இவை என்பது ...18
மருதத்திணைக்கு உரிய கருப்பொருள்கள் இவை என்பது. 19
நெய்தல்திணைக்கு உரிய கருப்பொருள்கள் இவைஎன்பது. 20