பக்கம் எண் :

 அகத்திணையியல்-நூற்பா-137                              407


 

     பாங்கி தலைவியைப் பாங்கிற் கூட்டல்:

 "அறுகால் நிறைமலர் ஐம்பால் நிறைஅணிந் தேன்அணிஆர்
  துறுகான்மலர்த்தொத்துத் தோகைதொல் ஆயம்மெல் லப்புகுக
  சிறுகால் மருங்குல் வருந்தா வகைமிக என்சிரத்தின்
  உறுகால் பிறர்க்குஅரி யோன்புலி யூர்அன்ன ஒண்ணுதலே."

                                                திருக்கோவை 126

 எனவும்,

     [என் தலையில்தான் வைத்த திருவடி பிறருக்கு மிகஅரியவனாகிய
 சிவபெருமானுடைய புலியூரை ஒத்த தலைவியே! மயிலனையாய்! வண்டுகள்
 நிறைந்த மலர்களை அணிந்த உன் கூந்தலில் நறுமணம் மிக்க இப்பூங்
 கொத்துக்களையும் செருகியுள்ளேன். உன் சிறிய இடை வருந்தாதபடி
 மெல்லத் தோழியர் கூட்டத்தை அடைவாயாக]

     பாங்கி தலைவியை நீங்கி ஓம்படை சாற்றல்:

 "பெடைநின்று காண உடன்நின்ற தோகை பெருநடம்செய்
  புடைநின்ற சோலைப் பொதியின்வெற் பாபொற்குழைதொடரும்
  கடைநின்று உகுபுனல் கண்ணிக்கும் நின்புவி காவலுக்கும்
  இடைநின்ற பாவிக்கும் ஏதம் உறாவண்ணம் எண்ணுகவே

                                                      அம்ப. 161

 எனவும்,

     [பெண்மயில் காண ஆண்மயில் நடஞ்செய்யும் சோலைகளை உடைய
 பொதியமலைத் தலைவனே! உன்னையே நினைத்துக் கண்ணீர்விடும்
 தலைவிக்கும், நிலஉலகைக் காக்கும் உன் காவலுக்கும், உங்களுக்கு இடையே
 நட்புறவை வளர்த்து நிற்கும் எனக்கும் தீங்கு நேராதபடி
 நடந்துகொள்வாயாக.]

     விருந்து விலக்கல்:

 "தழங்கும் அருவிஎம் சீறூர் பெரும இதுமதுவும்
  கிழங்கும் அருந்தி இருந்துஎம்மொடு இன்று கிளர்ந்துகுன்றர்