பக்கம் எண் :

 414                           இலக்கண விளக்கம்-பொருளதிகாரம்


 

    சிறைப்புற மாகச் செறிப்புஅறி வுறுத்தலும்10
    முன்னிலைப் புறமொழி மொழிந்துஅறி வுறுத்தலும்11
    முன்நின்று உணர்த்தலும்12 முன்நின்று உணர்த்தி
    ஓம்படை சாற்றலும்13 மேம்படு கிழவோன்
    தஞ்சம் பெறாது நெஞ்சொடு கிளத்தலும்14
    என்றஈர் ஏழும் எல்லுக்குறி விரியே."

     இஃது ஒருசார்பகற்குறி விரி இத்துணைத்து என்கின்றது.

     இ-ள் கிழவோன் பிரிந்துழிக் கிழத்தி மாலைஅம்பொழுது கண்டு
 இரங்கல் முதலாகக் கிழவோன் தஞ்சம் பெறாது நெஞ்சொடு கிளத்தல்
 ஈறாகச் சொல்லப்பட்ட பதினான்கும் ஒருசார் பகற்குறி விரியாம் என்றவாறு.

விளக்கம்

 [1 அந்திப்பொழுது கண்டு தலைவி ஆற்றாது வருந்துதல்.

  2 "தலைவியின் செயலால் களவு வெளிப்பட்டு விடுமோ?" என்று பாங்கி
    வருந்துதல்.

  3 தலைவன் வரக் காலம் தாழ்க்கவே, தலைவி வருந்துதல்.

  4 தலைவியைப் பாங்கி இடித்து உரைத்தல்.

  5 பாங்கி தன் முன்னே நிற்கவும் அவள்மேல் உள்ள வெறுப்பால்
    தலைவி அவளை நோக்கிக் கூறாமல் அவளுக்குப் புறமாக மொழிந்து
    அவளுக்கு அறிவுறுத்தல்.

  6 பின் தலைவி பாங்கியிடம் நேராக உரையாடுதல்.

  7 தலைவியை நோக்கிப் பாங்கி "களவு வெளிப்படும்" என்று அச்சம்
    உறச்செய்தல்.

  8 "தலைவனைப் பிரிந்திருத்தல் இயலாத செயலாய் உள்ளதே"
    என்பதனை  நினைத்துத் தலைவி வருந்துதல்.