1 தலைவிக்குத் தோழி தலைவன் இரவுக்குறிக்கண் வந்துள்ள செய்தியை
உணர்த்தியவழித் தலைவி தான் மற்றொன்றைத் தலைவன் செய்த
குறியாகக் கருதிச்சென்று அவனைக் காணாது வருந்தி மீண்ட
செய்தியைச் சொல்லுதல்.
2 பாங்கி தலைவி பொருந்த அறிந்துகொள்ளமுடியாதபடி தலைவன்
குறிப்புச் செய்த பொல்லாங்கை எடுத்துக் கூறுதல்.
3 தலைவன் இரவுக்குறிக்கண் தலைவியைக் காணாது மனம் வாடி
மீண்டு போதல்.
4 பொழுது விடிந்தபின் தலைவி தலைவன் இல்லாத அவ்விடத்தைக்
கண்டு மனம் வருந்துதல்.
5 தலைவி தன் துயரநிலையைத் தோழிக்கு உரைத்தல்.
6 தோழி தலைவியின் துயரத்தை ஆற்றுவித்தல்.