எல்லி வருநர் களவிற்கு
நல்லை அல்லை நெடுவெண் நிலவே.
[நிலவே! வேங்கைப்பூ விழுந்த பாறையைப் போலப் புலிக்குட்டி தோற்றமளிக்கும் இரவில் இரவுக்குறிக்கண் தலைவர் களவில் வருவாராகவும், நீ ஒளிவீசி அவர் புலிக்குட்டியை வேங்கைப்பூ விழுந்த பாறையாகக் கருதி மயங்குமாறு செய்வதால், நற்பண்பு உடையை ஆகாய்.]
நம்பேறு உடைமைஇருக்கின்றவா கடல்ஞாலத்து உள்ளோர்
தம்பேறு எனவந்த சந்திர வாணன் தரியலர்போல்
வம்புஏறு கொங்கை மயில்இயல் நாம்அஞ்ச மன்றமராம்
கொம்புஏறி நள்இருள் வாய்க்குழ றாநின்ற கூகைகளே.
[மயிலனையாய்! உலகவர் செய்த பாக்கியம்போல அவதரித்த சந்திரன் மகனாகிய வாணனுடைய பகைவரைப்போல நாம் அஞ்சுமாறு, மன்றத்திலுள்ள மராமரக் கிளையில் ஏறி நடுஇரவில் கோட்டான்கள் கத்தி, நாம் அச்சத்தால் இரவுக் குறிக்குச் செல்ல இயலாமல் செய்கின்றன. நம் பேறு அமைந்திருக்கும் நிலை வருந்தத்தக்கது.]
மன்பதை தாம்உய்ய வந்தருள் வாணன்தென் மாறைவெற்பர்
கொன்பதி வேல்வலம் கொண்டுவந்தால் தங்கள் கோன் அடைந்தான்
என்பது தேறி இடைஇருள் ஊரை எழுப்பும்வெம்முள்
பொன்பதி தாள்வளை வாய்ச்செய்ய சூட்டுவன் புள்ளினமே.
|
|
|
|