பக்கம் எண் :

 அகத்திணையியல்-நூற்பா எண்-147                         463


 

     எல்லி வருநர் களவிற்கு
     நல்லை அல்லை நெடுவெண் நிலவே.

குறுந். 47 

 எனவும்,

     [நிலவே! வேங்கைப்பூ விழுந்த பாறையைப் போலப் புலிக்குட்டி
 தோற்றமளிக்கும் இரவில்  இரவுக்குறிக்கண் தலைவர் களவில்
 வருவாராகவும், நீ ஒளிவீசி அவர் புலிக்குட்டியை வேங்கைப்பூ விழுந்த
 பாறையாகக் கருதி மயங்குமாறு செய்வதால், நற்பண்பு உடையை ஆகாய்.]

     கூகை குழறல்:

  நம்பேறு உடைமைஇருக்கின்றவா கடல்ஞாலத்து உள்ளோர்
  தம்பேறு எனவந்த சந்திர வாணன் தரியலர்போல்
  வம்புஏறு கொங்கை மயில்இயல் நாம்அஞ்ச மன்றமராம்
  கொம்புஏறி நள்இருள் வாய்க்குழ றாநின்ற கூகைகளே.

தஞ்சை. 207 

 எனவும்,

     [மயிலனையாய்! உலகவர் செய்த பாக்கியம்போல அவதரித்த சந்திரன்
 மகனாகிய  வாணனுடைய பகைவரைப்போல நாம் அஞ்சுமாறு,
 மன்றத்திலுள்ள மராமரக் கிளையில் ஏறி  நடுஇரவில் கோட்டான்கள் கத்தி,
 நாம் அச்சத்தால் இரவுக் குறிக்குச் செல்ல இயலாமல் செய்கின்றன. நம் பேறு
 அமைந்திருக்கும் நிலை வருந்தத்தக்கது.]

     கோழி குரல் காட்டல்:

  மன்பதை தாம்உய்ய வந்தருள் வாணன்தென் மாறைவெற்பர்
  கொன்பதி வேல்வலம் கொண்டுவந்தால் தங்கள் கோன் அடைந்தான்
  என்பது தேறி இடைஇருள் ஊரை எழுப்பும்வெம்முள்
  பொன்பதி தாள்வளை வாய்ச்செய்ய சூட்டுவன் புள்ளினமே.

தஞ்சை. 208 

 எனவும் வரும்.