|
புணர்தலும் பிரிதலும்
இருத்தலும் ஊடலும் இரங்கலும் இவற்றின் |
|
நிமித்தங்களும்
முறையே குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல், என்ற
ஐந்திணைகளுக்கும் உரிய பொருளாம் என்பது. |
....21 |
|
|
|
|
நிலன் ஒழிந்த முதற்பொருளும்
கருப்பொருள்களும் |
|
உரிப்பொருள்களும்
தத்தமக்கு உரிய திணைகளோடு வருதலேயன்றி ஏனைத் திணைகளோடும் மயங்கியும்
வரும் என்பது. |
....22 |
|
|
|
|
கைக்கிளையும் பெருந்திணையும் ஐந்திணைச் செய்யுட்கண் |
|
மயங்கி வரும் என்பது. |
....23 |
|
|
|
ஐந்திணைக்கண் களவு கற்பு என
ஒழுகலாறு இருவகைப்படும் |
|
என்பது. |
....24 |
|
|
|
|
களவிற்புணர்ச்சியாவது இயற்கைப்புணர்ச்சி முதலாக நான்கு |
|
வகைப்படும் என்பது. |
....25 |
|
|
|
|
இயற்கைப்புணர்ச்சி நிகழும்முன் கைக்கிளை நிகழும் |
|
என்பது. |
....26 |
|
|
|
|
கைக்கிளையாவது காமஞ்சான்ற
இளையோளைக் கண்டு அவள் |
|
உள்ளக் குறிப்பை அறியும்வரையில் தலைவன் தன் நெஞ்சோடு கூறிக்கொண்டிருப்பதாம் என்பது. |
....27 |
|
|
|
|
கைக்கிளை, அந்தணர் முதலிய நான்கு வருணத்தாருக்கும், |
|
குறிஞ்சி முதலிய ஐவகை
நிலமக்களுள் தலைமக்களுக்கும் உரியது என்பது. |
....28 |
|
|
|
|
இயற்கைப்புணர்ச்சி தெய்வத்தான் முடிவதும் உண்டு; |
|
தலைவியான் முடிவதும்
உண்டு என்பது. |
....29 |
|
|
|
|
இயற்கைப்புணர்ச்சி தெய்வத்தான் நிகழும்வழி முயற்சியின்றி |
|
முடிவதாம்
என்பது. |
....30 |