பக்கம் எண் :

அகத்திணையியல் - நூற்செய்தி 7


உடன்போய் வரைதல், மீண்டு வரைதல், உடன்போக்கு இடையீடுற்று  
  வரைதல் எனக் களவு வெளிப்பட்ட பின் வரைதல் மூவகைப்படும்
என்பது.
.... 40
     
உடன்போய் வரைதல் ஒரே வகையினை உடையது என்பது. .... 41
     
மீண்டு வரைதல், தலைவன் தன்மனைக்கண்ணே வரைதலும்  
  தலைவிமனைக்கண்ணே வரைதலும் என இருவகைப்படும் என்பது. .... 42
     
தலைவன் குறிக்கு வரும் வழியின் இடையூற்றை அஞ்சிய இடத்தும்,  
  தலைவன் வரைதலைத் தலைவிதமர் மறுத்தவிடத்தும், வேற்றவர்
தலைவியை மகட்கோடற்கு ஏற்பாடு செய்தவிடத்தும், தலைவியை
இற்செறித்தவிடத்தும் அறத்தொடுநிலை நிகழும் என்பது.
.... 43
     
தலைவி பாங்கிக்கும், பாங்கி செவிலிக்கும், செவிலி நற்றாய்க்கும்  
  நற்றாய் தந்தைதன்னையருக்கும் முறையே அறத்தொடுநிற்பர் என்பது. .... 44
     
பாங்கியிற் கூட்டம் நீங்கலான ஏனைய மூவகைக் கூட்டத்தின்கண்ணும்  
  தலைவன் ஒருவழித் தணத்தலானும், தலைவன் வரைவு
இடைவைத்துப் பொருள் வயின் பிரிதலானும், தலைவனைச் செவிலி குறியிடத்துக் காண்டலானும், தலைவியை இற்செறித்தலானும் தலைவிக்கு வருத்தம் மிகுமிடத்துத் தோழி தன்னை வினவியவிடத்தும் வினவாதவிடத்தும் தலைவி அறத்தொடுநிற்பாள் என்பது.
.... 45
     
பாங்கி முன்னிலைப்புறமொழிகளானும் முன்னிலை மொழிகளானும்  
  செவிலிக்கு அறத்தொடுநிற்பாள் என்பது. .... 46