செவிலி நற்றாய்க்கு வெளிப்படையாக அறத்தொடு நிற்பாள் என்பது. |
|
|
நற்றாய், தந்தைதன்னையருக்குக் குறிப்பாக அறத்தொடு நிற்பாள் என்பது. |
|
|
பாங்கி தலைவியையும், செவிலி பாங்கியையும் வினவுவர்; தலைவியை உற்றுநோக்கி அவளிடத்து வேறுபாடு கண்டவழித் தோழியை நற்றாயும் வினவுவாள் என்பது. |
|
|
தலைவி தலைவனுடன் போயவழித் தோழி செவிலி நற்றாய் மூவரும் சேர்ந்து அறத்தொடுநிற்பர் என்பது. |
|
|
கற்பாவது களவின் வழிவந்த கற்பு, களவின் வழிவாராக் கற்பு என இருதிறப்படும் என்பது. |
|
|
குரவரால் புணரும் வதுவைப் புணர்ச்சியும், வாயில்களால் புணரும் ஊடல்நீக்கிப புணரும் புணர்ச்சியும் என்று கற்பின்புணர்ச்சி இருவகைப்படும் என்பது. |
|
|
களவின் வழிவந்த கற்பின்கூட்டம், உடன்போய் வரைதலான் உறவினர் இன்றியும் நிகழும் என்பது. |
|
|
களவு கற்பு என்ற இருகைகோளினும், தலைவற்குக் களவுப்புணர்ச்சியும் திருமணப்புணர்ச்சியும் உண்டு என்பது. |
|
|
காதல்பரத்தையர், காமக்கிழத்தியர், பின்முறைமனைவியர் என்ற மூவரும் கற்புக்காலப் புணர்ச்சிக்கு உரியர் என்பது. |
|
|
காதற் பரத்தையர் களவுப்புணர்ச்சிக்கே உரியர் என்பது. |
|
|