பக்கம் எண் :

 அகத்திணையியல் - நூற்செய்தி                                9


 

 காமக்கிழத்தியும், பின்முறைமனைவியும் திருமணப்புணர்ச்சிக்கு உரியர்
  என்பது.


....


57

 பரத்தை, ஓதல், காவல், தூது, உதவி, பொருள் இவை குறித்துக்
  கற்பிற் பிரிவு நிகழும் என்பது.


....


58

 அப்பிரிவுகளில் தலைவன் அயல்மனை, அயல்சேரி, ஊர்ப்புறம்
  இவற்றிற்குப் பிரிவான் என்பது.


....


59

 காமக்கிழத்தியர் பொருட்டாக அயல்மனைக்குத் தலைவன் பிரிவான்
  என்பது.


....


60

 பின்முறைமனைவி, பரத்தை இவர் காரணமாகவும், விழாக்
  காரணமாகவும் அவன் அயற்சேரிக்குப் பிரிவான் என்பது.


....


61

 புதியளாகிய பரத்தையைத் தேர்மிசை ஏற்றிக்கொண்டு இளமரக்காவில்
  விளையாடற்கும் புனல்ஆடற்கும் அவன் நகர்ப்புறத்திற்குப் பிரிவான்
  என்பது.



....



62

 அம்மூன்று பிரிவின்கண்ணும் தலைவிக்குத் தலைவன் பால் ஊடல்
  ஏற்படும் என்பது.


....


63

 பாணன் முதல் விருந்தினன் ஈறாய ஒன்பதின்மரும், ஆற்றாமையும்
  தலைவியின் ஊடல் தீர்க்கும் வாயில்கள் என்பது.


....


64

 ஓதற்பிரிவு அந்தணர் அரசர் வணிகர் ஆகிய மூவருக்கும் உரித்து
  என்பது.


....


65

 வேதம்ஓதுதல் அல்லாத கல்வி நான்கு வருணத்தாருக்கும் உரித்து
  என்பது.


....


66