தெய்வம் வாழ்த்தலும்3 இவ்வொரு
மூன்றும்
செவிலி அறத்தொடு நிற்றலின் கவலையில்
பாங்கி தன்னொடும்4 பாங்கியர் தம்மொடும்5
அயலார் தம்மொடும்6 பயில்இடம் தன்னொடும்7
தாங்கலள் ஆகிச் சாற்றிய நான்கும்
நிமித்தம் போற்றலும்8 சுரம்தணி வித்தலும்9
தன்மகள் மென்மைத் தன்மைக்கு இரங்கலும்10
இளமைத் தன்மைக்கு உளம்மெலிந்து இரங்கலும்11
அச்சத் தன்மைக்கு அச்சமுற்று இரங்கலும்12
ஆகிய ஐந்தும் போகிய இறைமகள்
ஆயமும் தாயும் அழுங்கக் கண்டு
காதலின் இரங்கும் கண்டோர் இரக்கமும்13
ஆற்றாத் தாயைத் தேற்றலும்14 ஆற்றிடை
முக்கோல் பகவரை வினாதலும்15 மிக்கோர்
ஏதுக் காட்டலும்16 எயிற்றியொடு புலம்பலும்17
குரவொடு புலம்பலும்18 சுவடுகண்டு இரங்கலும்19
கலந்துஉடன் வருவோர்க் கண்டுகேட் டலும்20 அவர்
புலம்பல் தேற்றலும்21 புதல்வியைக் காணாது
கவலைகூர் தலும்22 புதல்வியைக் காணாது
கவலைகூர் தலும்22 எனும் இவைஒன் பானும்என்று
இத்திறம் இயம்பிய எழுமூன்றும் ஒன்றும்
கற்பொடு புணர்ந்த கவ்வையின் விரியே.
இது கற்பொடு புணர்ந்த கவ்வையின் விரி இத்துணைத்து என்கின்றது.
(இ-ள்) வினவிய பாங்கியின் உணர்ந்த காலை இனையல் என்போர்க்கு
எதிர்
அழிந்து மொழிதல் முதலாகத் தெய்வம் வாழ்த்தல் ஈறாகச்
சொல்லப்பட்ட
இவ்வொருமூன்றும்.
செவிலி அறத்தொடு நிற்றலின் கவலையில் பாங்கிதன்னொடு புலம்பல்
முதலாகப் பயில் இடம்தன்னொடு புலம்பல் ஈறாகச் சொல்லப்பட்ட நான்கும், |