இஃது இளைய கலாம் ஆகிய
ஊடல் விரி இத்துணைத்து
என்கின்றது.
(இ-ள்) காதலன் பிரிவுழிக் கண்டோர் புலவிக்கு ஏது ஈதாம்
இவ்விறைவிக்கு
என்றல் முதலாகப் புணர்ச்சியின் மகிழ்தல் ஈறாகச்
சொல்லப்பட்ட
பதினொன்றும் உணர்த்த உணரும் ஊடற்கு உரியவாம்
என்றவாறு.
விளக்கம்
பரத்தையின் பிரிவு--பரத்தையின்பம் நுகர்தற்குத் தலைவன் பிரிதல்.
1 தலைவன் பரத்தைபால் இன்பம் நுகர்தற்குப் பிரிந்த இடத்து
அச்செயலை
அறிந்தவர்கள் இவன் இங்ஙனம் பிரிந்தது தலைவியின்
ஊடலுக்குக்
காரணமாம் என்றல்.
2 தனித்த இடத்துத் தலைவி துன்பம்உற்று வருந்துதல்.
3 ‘இங்ஙனம் நீ துன்புறுதலுக்குக் காரணம் யாது?' என்று தலைவியைப்
பாங்கி வினாவுதல்.
4 தலைவன் பரத்தைபால் சென்றதனைத் தலைமகள் தோழிக்கு
உணர்த்துதல்.
5 ‘தலைமகனுடைய குற்றத்தைக் கூறுதல் கற்புடைமைக்குத் தகாது' என்று
பாங்கி தலைவியை இடித்து
உரைத்தல்.
6 தலைவி பூப்பு உற்றதைத் தலைமகன் அறிதற்குத் தலைவி, செம்மலர்
முதலியவற்றை அணிந்துகொள்ளச்செய்து ஒருத்தியைப் பரத்தை
வீட்டில்
இருக்கும் தலைவன்பால் விடுத்தபொழுது, அதனைக்கண்ட
அயலார்
வருந்திக் கூறுதல்.
7 செவ்வணி அணிந்து வந்தவளைக் கண்டு பரத்தையர் தலைவியைப்
பழித்துப் பேசுதல். |