|
தணியாள் ஆகத் தலைமகன்
ஊடலும்13
அணிவளைப் பாங்கி அன்புஇலை கொடியைஎன்று
இணர்த்தார் மார்பனை இகழ்தலும்14 பிறவும்
உணர்த்த உணரா ஊடற்கு உரிய.
இது முதியகலாம் ஆகிய ஊடல்விரி இத்துணைத்து என்கின்றது.
(இ-ள்) வெள்ளணி அணிந்து விடுப்புழித் தலைவன் வாயில்
வேண்டல்
முதலாகப் பாங்கி தலைவன் அன்புஇலை கொடியை என்று
இகழ்தல் ஈறாகச்
சொல்லப்பட்டனவும் பிறவும் உணர்த்த உணரா ஊடற்கு
உரியவாம்
என்றவாறு.
அநுவாதமுகத்தான், வெள்ளணி அணிந்து விடுத்தலும் வரப்பெறும்.
விளக்கம்
1 தான் புதல்வனைப் பெற்றமையைத்
தலைவனுக்கு அறிவித்தற்கு
நினைத்து வெண்மலர் முதலியவற்றை அணிந்து கொள்ளச் செய்து
ஒருத்தியைத் தலைவியானவள் தலைவன்பால் விடுத்த இடத்து,
அதுகண்டு அவன் வந்து நின்று,
‘யான் தலைவியைப் பார்க்கும்படி
செய்தற்கு நீ தூதாக வேண்டும்' என்று பாங்கியை வேண்டுதல்.
2 தலைவி புனிறுதீர்ந்து நெய் முழுகியதைப் பாங்கி தலைவனுக்குத்
தெரிவித்தல்.
3 தலைவன் தன் மனத்தின்கண் மகிழ்ச்சி மிகுதல்,
4 தலைவிக்கு தலைவன் வந்துள்ள செய்தியை பாங்கி சொல்லுதல்.
5 தலைவி தலைவன் வருகையை உணர்ந்து தலைவனோடு வெகுளுதல். |