வஞ்சி வணங்கார் வணக்கிய வண்டார்ப்பக்
குஞ்சி மலைந்தானெங் கோ” [பு. வெ. வஞ். 1]
எனவரும்.
2. ஓடாப்படை யியங்கரவத்திற்குச் செய்யுள்:-
“பௌவம் பணைமுழங்கப் பற்றார்மண் பாழாக
வவ்விய வஞ்சி வலம்புனையச்-செவ்வே
லொளிறும் படைநடுவ ணூழித்தீ யன்ன
களிறுங் களித்ததிருங் கார்”
[பு. வெ. வஞ். 2]
எனவரும்.
3. குடைநாட்கோடற்குச்
செய்யுள்:-
“முன்னர் முரசிரங்க மூரிக் கடற்றானைத்
துன்னருந் துப்பிற் றொழுதெழா-மன்ன
ருடைநா ளுலந்தனவா லோதநீர் வேலிக்
குடைநா ளிறைவன் கொள”
[பு. வெ. வஞ். 3]
னவரும்.
4. வாணாட்கோடற்குச் செய்யுள்:-
“அறிந்தவ ராய்ந்தநா ளாழித்தேர் மன்ன
னெறிந்தில கொள்வா ளியக்க-மறிந்திகலிப்
பின்பகலே யன்றியும் பேணா ரகநாட்டு
நன்பகலுங் கூகை நகும்”
[பு. வெ. வஞ். 4]
எனவரும். பின்பகல், இரவு.
5. கொற்றவை நிலைக்குச்
செய்யுள்:-
“அணங்குடை நோலை பொரிபுழுக்கல் பிண்டி
நிணங்குடர் நெய்த்தோர் நிறைத்துக்-கணம்புகலக்
கையிரீஇ மண்டைக் கணமோடி காவலற்கு
மொய்யிரியத் தான்முந் துறும்”
[பு. வெ. வஞ். 5]
எனவரும். நோலை, எட்கசிவு.
6.
வெற்றிவேலுழவர் செய்தொழில் கூறிய மற்றதன் பகுதிக்குச்
செய்யுள்:- |