பக்கம் எண் :

22 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்


     "தமருட் டலையாத றார்தாங்கி நிற்ற
     லெமருள்யா மின்னமென் றெண்ண-லமரின்
     முடுகழலின் முந்துறுதன் முல்லைத்தார் வேந்தற்
     றொடுகழலின் மைந்தர் தொழில்"
             [பு. வெ. வஞ். 6]
எனவரும்.

     
7. மறிதிரையுலகம் வணங்க எஃகுயர்த்த குரிசிலைவழுத்திய
கொற்றவஞ்சிக்குச்
செய்யுள்:-

     
"அழலடைந்த மன்றத் தலந்தயரா நின்றார்
     நிழலடைந்தே நின்னையென் றேத்திக்-கழலடையச்
     செற்றங்கொண் டாடிச் சிலைத்தெழுந்தார் வீந்தவியக்
     கொற்றங்கொண் டெஃகுயர்த்தான் கோ"
       [பு. வெ. வஞ். 7]

எனவரும்.

     
8. வேந்தனைப் புகழ்ந்து வேற்றுநாடழிபு கூர்ந்தமைக்கு
இரங்கிய கொற்றவள்ளைக்குச்
செய்யுள்:-*

     
"தாழார மார்பினான் றாமரைக்கண் சேந்தனவாற்
     பாழாய்ப் பரிய விளிவதுகொல்-யாழாய்ப்
     புடைத்தே னிமிர்கண்ணிப் பூங்கட் புதல்வர்
     நடைத்தே ரொலிகறங்கு நாடு"
                [பு. வெ. வஞ். 8]

எனவரும். வள்ளை, உலக்கைப்பாட்டு.

     
9. பொருமுறை பகையொடு பொருத வீரர்க்குப்
பெரிதருள்சுரந்த பேராண்வஞ்சிக்குச்
செய்யுள்:-

     
"பலிபெறு நன்னகரும் பள்ளி யிடனு
     மொலிகெழு நான்மறையோ ரில்லு-நலிவொரீஇப்
     புல்லா ரிரியப் பொருதார் முனைகெடுத்த
     வில்லார்க் கருள்சுரந்தான் வேந்து"
[பு. வெ. வஞ். 9]

எனவரும்.

     
10. அருந்திறையளப்ப ஆறிய சினத்தோடு பெரும்பூண்
மன்னவன் பெயர்ந்த பக்கத்திற்குச்
செய்யுள்:-

     
"கூடி முரசிரங்கக் கொய்யுளைமா முன்னுகளப்
      பாடி 1 பெயர்த்திட்டான் பல்வேலான்-கோடி

    * புறநா. 4, 7, 41, 98, 100.
    (பா - ம்) 1 பெயர்ந்திட்டான்