நிதியந் திறையளந்தார் நேராருந் தன்கீழ்
முதியமென் றாறி முரண்”
[பு. வெ. வஞ். 10]
எனவரும்.
11. திண்ணியவேந்திற் சிறப்புற்றோர் பெறூஉம் வண்மைகூறிய
மாராயவஞ்சிக்குச் செய்யுள்:-
“நேராரம் பூண்ட நெடுந்தகை நேர்கழலான்
சேரார் முனைநோக்கிக் கண்சிவப்பப்-போரார்
நறவே கமழ்தெரிய னண்ணா ரெறிந்த
மறவே லிலைமுகந்த மார்பு” [பு. வெ. வஞ். 11]
எனவரும்.
12. செறியலர் போர்க்களஞ் சென்றுதன்னாண்மை
நெறியெடுத்தியம்பிய நெடுமொழி வஞ்சிக்குச்
செய்யுள்:- (வஞ்சினம்)
“இன்ன ரெனவேண்டா வென்னோ டெதிர்சீறி
முன்னர் வருக முரணகலு-மன்னர்
பருந்தார் படையமருட் பல்லார் புகழ
விருந்தா யடைகுறுவார் விண்”* [பு. வெ. வஞ். 12]
எனவரும்.
13.
தொன்னெறிமரபின் வாட்குடித்தோன்றிய முன்னவனிலை
புகல் முதுமொழி வஞ்சிக்குச் செய்யுள்:-
“குளிறு முரசங் குணில்பாயக் கூடா
ரொளிறுவாள் வெள்ள முழக்கிக்-களிறெறிந்து
புண்ணொடு வந்தான் புதல்வற்குப் பூங்கழலோய்
1 தண்ணடை நல்க றகும்” [பு. வெ. வஞ். 13]
எனவரும்.
4. கூடலர்நாட்டுக் கொடிநெடுவியலூர் ஓடெரியூட்டிய உழபுல
வஞ்சிக்குச் செய்யுள்:-
“அயிலன்ன கண்புதைத் தஞ்சி யலறி
மயிலன்னார் மன்றம் படரக்-குயிலகவ
* புறநா. 7, 16, 31.
1 இது தன்மேம்பாட்டுரையணியுமாகும். - [இ - வி. 606] |