பக்கம் எண் :

24 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்


     வாடிரிய வண்டிமிருஞ் செம்ம லடையார்நாட்
     டோடெரியுள் வைகின வூர்”
                 [பு. வெ. வஞ். 14]

எனவரும்.

    
15. குறுகலரருமுனை கொள்ளைசாற்றி மறுகுறக்கவர்ந்த மழபுல
வஞ்சிக்குச்
செய்யுள்:-*

    
“களமர் கதிர்மணி காலேகஞ் செம்பொன்
     வளமனை பாழாக வாரிக்-கொளன்மலிந்து
     கண்ணார் சிலையார் கவர்ந்தார் கழல்வேந்த
     னண்ணார் கிளையலற நாடு”
                 [பு. வெ. வஞ். 15]

எனவரும்.

    
16. நீடவுங் குறுகவு நிவப்பவுந் தூக்கிப் பாடிய பாணர்க்குப்
பயந்த கொடை வஞ்சிக்குச்
செய்யுள்:-

    
“சுற்றிய சுற்ற முடன்மயங்கத் தம்வயி
     றெற்றி மடவா ரிரிந்தோட-முற்றிக்
     குரிசி லடையாரைக் கொண்டகூட் டெல்லாம்
     பரிசின் முகந்தன பாண்”
                    [பு. வெ. வஞ். 16]

எனவரும்.

     
17. மடுத்தவேந்தற்கு வழங்குவ வழங்கிக் குடிக்கருள்சுரந்த
குறுவஞ்சிக்குச்
செய்யுள்:-

     
“தாட்டாழ் தடக்கைத் தனிமதி வெண்குடையான்
      வாட்டானை வெள்ளம் வரவஞ்சி-மீட்டான்
      மலையா மறமன்னன் மால்வரையே போலுங்
      கொலையானை பாய்மா கொடுத்து”
          [பு. வெ. வஞ். 17]

எனவரும்.

       1
8. மட்டூர்தெரியல் மறங்கெழுவேந்தன் கட்டூர்வகைமை
கட்டுரைத்த பக்கத்திற்குச்
செய்யுள்:-

      “அவிழ்மலர்க் கோதைய ராட வொருபா
      லிமிழ்முழவ மியாழோ டியம்பக்-கவிழ்மணிய
      காய்கடா யானை யொருபாற் களித்ததிரு
      மாய்கழலான் கட்டூ ரகத்து”
                 [பு. வெ. வஞ். 18]


எனவரும்.


* தண்ணடை நல்கல்-மருதநிலங்களைத்தருதல்;-புறநா. 285, 287, 297.