19. வருவிசைப்புனலைக் கற்சிறைபோல ஒருவன் தாங்கிய
ஒருதனி நிலைக்குச் செய்யுள்:-
“வீடுணர்ந் *தோர்க்கும் வியப்பாமா லிந்நின்ற
வாடன் முதியாள் வயிற்றிடங்-கூடார்
பெரும்படை வெள்ள நெரிதரவும் பேரர
விரும்புலி சேர்ந்த விடம்” [பு. வெ. வஞ். 19]
எனவரும்.
20. அழியுநர்புறக்கொடை அயில்வா ளோச்சாக் கழிதறுகண்மைத்
தழிஞ்சிக்குச் செய்யுள்:-
“கான்படு தீயிற் கலவார்தன் மேல்வரினுந்
தான்படை தீண்டாத் தறுகண்ணன்-வான்படர்தல்
கண்ணியபின் னன்றிக் கறுத்தார் மறந்தொலைத
லெண்ணியபின் 1 போக்குமோ வெஃகு” [பு. வெ. வஞ். 20]
எனவரும். தழிஞ்சி - தழுவல்.
21. மதிக்குடைவேந்தன் மாற்றலர் வணங்கவும்
பதிப்பெயர்கில்லாப் பாசறைவஞ்சிக்குச் செய்யுள்:-
“கரும்பொடு காய்நெற் கனையெரி யூட்டிப்
பெரும்புனல் வாய்திறந்த பின்னுஞ்-சுரும்பின்
றொகைமலிந்த தண்குவளைத் தூமலர்த் தாரான்
பகைமெலியப் பாசறையு ளான்” [பு. வெ. வஞ். 21]
எனவரும்.
22. முன்னடையாதார் வளங்கெழு நாட்டைப் பின்னும்
எரியூட்டிய பெருவஞ்சிக்குச் செய்யுள்:-
“பீடுலா மன்னர் நடுங்கப் பெரும்புகை
யூடுலாய் வானத் தொளிமறைப்ப-நாடெலாம்
பின்னும் பிறங்கழல் வேய்ந்தன பெய்கழற்கான்
மன்னன் கனல மறம்” [பு. வெ. வஞ்.
22] |