பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [சிறப்பு]77


    
19. வாழ்மனைபுகீஇ வைகறைமுழக்கிய கேழ்கிளர்கிணைவன்
கிளந்தகிணை நிலைக்குச்
செய்யுள்:-

    
“வெள்ளி முளைத்த விடியல் வயலாமை
     யள்ளகட் டன்ன வரிக்கிணை-வள்ளியோன்
     முன்கடை தட்டிப் பகடுவாழ் கென்னாமு
     னென்கடை நீங்கிற் றிடர்”
                      [பு. வெ. பா. 18]

எனவரும். அரி - அழகு.

   
20. செங்களத்தீட்டிய செல்வம் வெண்டுறையாழ் மங்கலப்பாணர்
மறுத்த களவழிக்குச்
செய்யுள்:-

    
“ஈண்டி யெருவை யிறகுளரும் வெங்களத்து
     வேண்டியாங் கொண்ட விறல்வேழம்-வேண்டாள்
     வளைகள் வயிரியம்பும் வாட்டானை வேந்தே
     விளைகட் பகர்வாள் விலை”
                    [பு. வெ. பா. 19]

எனவரும்.

    
21. கூற்றிருந்தாலுங் கொலைவேல் மன்னவன் வீற்றினிதிருந்த
பெருமங்கலத் திற்குச்
செய்யுள்:-

    
“அழலவிர் பைங்க ணரிமா னமளி
     நிழலவிர்பூண் மன்னர்நின் றேத்தக்-கழல்புனைந்து
     வீமலிதார் மன்னவனாய் வீற்றிருந்தான் வீங்கொலிநீர்ப்
     பூமலி நாவற் பொழிற்கு”
                       [பு. வெ. பா. 20]

எனவரும்.

    
22. நெடுமதிலெறிந்த நிரைதார் மன்னன் குடுமிகளைந்த புகழ்சாற்று
நிலைக்குச்
செய்யுள்:-

    
“பூந்தா மரையிற் பொடித்துப் புகல்விசும்பின்
     வேந்தனை வென்றான் விறன்முருக-னேந்து
     நெடுமதில் கொண்டு நிலமிசையோ ரேத்தக்
     குடுமி களைந்தானெங் கோ”
                   [பு. வெ. பா. 21]

எனவரும். குடுமிகளை தல் - மயிர்ச்சிகையைக் கூட்டிமுடித்தல்.

    
23. இகலடு தடந்தோள் எறிவேலிறைவன் மகளிரொடு மணந்த
மணமங்கலத்திற்குச்
செய்யுள்:-

    
“அணக்கருந் தானையா னல்லியந்தார் தோய்ந்தோண்
     மணக்கோல மங்கலம்யாம் பாட - வணக்கருஞ்சீ