பக்கம் எண் :

8 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்


4. தணியலரெழுந்தோர் சமரவாய்ப்பறீஇயர் விரிச்சியோர்த்தற்குச்
செய்யுள்:-


    
 “எழுவணி சீறூ ரிருண்மாலை முன்றிற்
      குழுவினங் கைகூப்பி நிற்பத்-தொழுவிற்
      குடக்கணீ கொண்டுவா வென்றாள் குனிவிற்
      றடக்கையாய் வென்றி தரும்” [பு. வெ. வெட்சி. 4]

எனவரும். அரசனேவலாற் போந்தோர்க்கு விரிச்சியோர்த்தல்
இயல்வதன்றேனும் இன்னஞான்று வினைவாய்க்குமென்று அறிதற்பொருட்டு
இயலுமென்பார் ‘சமரவாய்ப்பறீஇயர் விரிச்சியோர்த்த’ லென்றார்.

5. வேண்டாவீரத்திற்குச் செய்யுள்:-

             
நேரிசை யாசிரியப்பா

    
“நாளும் புள்ளுங் கேளா வூக்கமொ
     டெங்கோ னேயின னாதலின் யாமத்துச்
     செங்கால் வெட்சியுந் தினையுந் தூஉய்
     மறிக்குரற் குருதி மன்றுதுக ளவிப்ப
     விரிச்சி யோர்த்தல் வேண்டா
     வெயிற்புறந் தருதும்யாம் பகைப்புல நிரையே”
                                        [தகடூர். புறத். 1241]
எனவரும்.

6. வரிச்சிலைமறவர் வழியிடைச் சேறற்குச் செய்யுள்:-

   “கூற்றினத் தன்னார் கொடுவி லிடனேந்திப்
    பாற்றினம் பின்படர முன்படர்ந்-தேற்றின
    நின்ற நிலைகருதி யேகினார் நீள்கழைய
    குன்றங் கொடுவில் லவர்”
[பு. வெ. வெட்சி. 5]
எனவரும்.

7. ஒற்றினாகிய வேய்க்குச் செய்யுள்:-

   “நிலையு நிரையு நிரைப்புறத்து நின்ற
    சிலையுஞ் செருமுனையுள் வைகி-யிலைபுனைந்த
    கள்ளவிழ் கண்ணிக் கழல்வெய்யோய் சென்றறிந்து
    நள்ளிருட்கண் வந்தார் நமர்”
[பு. வெ. வெட்சி. 6]

எனவரும். ஒற்றினாகியவேய், ஒற்றுகையான் உணர்த்திய குறளைச் சொல்.