பக்கம் எண் :

இலக்கணவிளக்கம் - புறத்திணையியல் [எச்சம்]89

 

பிறவும் வெட்சிமுதலாக மேற்கூறிய எழுவகைத்திணையுள்ளுஞ் செறிந்த
ஒழிபென்று ஆராய்ந்துகொள்க, எ - று.

    
1. வேந்திடை தெரிதல்வேண்டி ஏந்துபுகழ்ப் போந்தைவேம்பே
ஆரெனவரூஉம் மாபெருந்தானையர் மலைந்தபூ மூன்றனுட்
போந்தைக்குச்
செய்யுள்:-

    
“குடையலர் காந்தட்டன் கொல்லிச் சுனைவாய்த்
     தொடையவிழ் தண்குவளை சூடான்-புடைதிகழுந்
     தேரதிரப் பொங்குந் திருந்துவேல் வானவன்
     போரெதிரிற் போந்தையாம் பூ”
                [பு. வெ. பொது. 1]

எனவரும்.

    
வேம்புக்குச் செய்யுள்:-

    
“தொடியணிதோ ளாடவர் தும்பை புனையக்
     கொடியணிதேர்க் கூட்டணங்கும் போழ்தின்-முடியணியுங்
     காத்தல்சால் செங்கோற் கடுமா னெடுவழுதி
     யேத்தல்சால் வேம்பி னிணர்”
                [பு. வெ. பொது. 2]

எனவரும்.

    
ஆர்க்குச் செய்யுள்:-

    
“கொல்களி றூர்வர் கொலைமலி வாண்மறவர்
     வெல்கழல் வீக்குவர் வேலிளையர்-மல்குங்
     கலங்க லொலிபுனற் காவிரி நாட
     னலங்க லமரழுவத் தார்”
                     [பு. வெ. பொது. 3]

எனவரும்.

    
2. துன்னருஞ் சிறப்பிற் தொடுகழன்மன்னனை உன்னஞ் சேர்த்திய
உன்னநிலைக்குச்
செய்யுள்:-

    
“துன்னருந் தானைத் தொடுகழலான் றுப்பெதிர்ந்து
     முன்னர் வணங்கார் முரண்முருங்க-மன்னரு
     மீடெலாந் தாங்கி யிகலவிந்தார் நீயுநின்
     கோடெலா முன்னங் குழை”
                  [பு. வெ. பொது. 4]

எனவரும்.

    
3. ஏழகமூரினும் இன்னனென்றவன் தாழ்விலூக்கத்து ஏழக
செய்யுள்:-

    
மனை யாமகிழ வேழக மேற்கொளினுந்
    மதி றாழ்வீழ்த் திருக்குமே-தெம்முனையுண்