8.
வேய்ப்புறம் முற்றினாகிய புறத்திறைக்குச் செய்யுள்:-
“உய்ந்தொழிவா ரீங்கில்லை யூழிக்கட் டீயேபோன்
முந்தமரு ளேற்றார் முரண்முருங்கத்-தந்தமரி
னொற்றினா ரொற்றி யுரவோர் குறும்பினைச்
சுற்றினார் போகாமற் சூழ்ந்து” [பு. வெ. வெட்சி. 7]
எனவரும். வேய்ப்புறமுற்றினாகிய புறத்திறை - வேய்க்கப்பட்ட இடத்தின்
புறத்தினைச் சூழ்தலானாகிய
புறத்திறை.
9.
முற்றிய ஊர்கொலைக்குச் செய்யுள்:-
“இகலே துணையா வெரிதவழச் சீறிப்
புகலே யரிதென்னார் புக்குப் - பகலே
தொலைவிலார் வீழத் தொடுகழ லார்ப்பக்
கொலைவிலார் கொண்டார் குறும்பு” [பு. வெ. வெட்சி. 8]
எனவரும்.
10.
ஆகோடற்குச் செய்யுள்:-
“கொடுவரி கூடிக் குழூஉக்கொண் டனைத்தா
னெடுவரை நீள்வேய் நரலு-நடுவூர்க்
கணநிரை கைக்கொண்டு கையகலார் நின்ற
நிணநிரை வேலார் நிலை” [பு. வெ. வெட்சி. 9]
எனவரும்.
11.
பூசன்மாற்றிற்குச் செய்யுள்:-
“சூழ்ந்த நிரைபெயரச் சுற்றித் தலைக்கொண்டார்
வீழ்ந்தனர் வீழ்ந்தார் விடக்குணியத்-தாழ்ந்த
குலவுக் கொடுஞ்சிலைக்கைக் கூற்றனையா ரெய்த
புலவுக் கணைவழியே புள்” [பு. வெ. வெட்சி. 10]
எனவரும்.
12.
நோயின்றுய்த்தற்குச் செய்யுள்:-
“புன்மேய்ந் தசைஇப் புணர்ந்துடன் செல்கென்னும்
வின்மே லசைஇயகை வெல்கழலான்-றன்மேற்
கடுவரை நீரிற் கடுத்துவரக் கண்டு
நெடுவரை நீழ னிரை” [பு. வெ. வெட்சி. 11]
எனவரும். |