வெள்ளில் விளைவுதிரும் வேயோங்கும் வெஞ்சுரத்துக்
கொள்ளனீ கோடல் கொடிது”
[பு. வெ. சி. பொது. 1]
எனவரும்.
14. வாகைவேலவன் வழங்கருஞ்சுரத்திடைத் தோகையை யிழந்து
துளங்குசுரநடைக்குச் செய்யுள்:-
“உரவெரி வேய்ந்த வுருப்பவிர் கானுள்
வரவெதிரின் வைவேல்வாய் வீழ்வாய்-கரவினாற்
பேதையைப் பெண்ணியலைப் பெய்வளையை யென்மார்பிற்
கோதையைக் கொண்டொளித்த கூற்று” [பு. வெ. சி. பொது. 2]
எனவரும்.
15. மனைவியை யிழந்து மனைவயினிருந்தோன் தனிநிலை யுரைத்த
தபுதாரநிலைக்குச் செய்யுள்:-
“பைந்தொடி மேலுலக மெய்தப் படருழந்த
மைந்தன் குரிசில் மழைவள்ள-லெந்தை
தபுதாரந் தாழ்ந்த தனிநிலைமை கேளாச்
செவிடா யொழிகென் செவி” [பு. வெ. சி. பொது. 3]
எனவரும்.
16. இவர்பூண்மொய்ம்பன் இறந்தபின் மனையோள்
தவமேற்கொண்ட தாபதநிலைக்குச் செய்யுள்:-
*
“கலந்தவனைக் கூற்றங் கரப்பக் கழியா
தலைந்தினையு மவ்வளைத் தோளி-யுலந்தவன்
றாரொடு பொங்கி நிலனசைஇத் தான்மிசையுங்
காரடகின் மேல்வைத்தாள் கை” [பு. வெ. சி. பொது. 4]
எனவரும்.
17. ஆய்பெருஞ்சிறப்பிற் சிறுவற்பயந்த தாய்தபவரூஉந்
தலைப்பெயனிலைக்குச்
செய்யுள்:-
“இடம்படு ஞாலத் தியல்போ கொடிதே
தடம்பெருங்கட் பாலக னென்னுங்-கடன்கழித்து
முள்ளெயிற்றுப் பேதையாள் புக்காள் முரணவியா
வள்ளெயிற்றுக் கூற்றத்தின் வாய்” [பு. வெ. சி. பொது. 5]
எனவரும்.
* புறநா. 143, 248 - 250. |