18. பல்லிதழ்மழைக்கட் பாலகன் மாய்ந்தெனப் புல்லிய பெருங்கிளைப் பூசல்மயக்கத்திற்குச் செய்யுள்:- "அலர்முலை யஞ்சொ *லவளொழிய வவ்விற் குலமுதலைக் கொண்டொளித்த லன்றி-நிலமுறப் புல்லிய பல்கிளைப் பூசல் பரியுமோ கொல்லிய வந்தொழியாக் கூற்று" [பு. வெ. சி. பொது. 6] எனவரும். 19. வேந்தன்மாய்ந்தென வியலிடம்புலம்பிய ஆய்ந்த அத்துறைப் பகுதிக்குச் செய்யுள்:- "எண்ணி னிகல்புரிந்தோ தெய்தாத தில்போலுங் கண்ணினொளிர் வேலான் கரந்தபி-னண்ணல் புகழொடு பூசன் மயங்கிற்றாற் பொங்கு மகழ்கடல் வேலி யகத்து" [பு. வெ. சி. பொது. 7] எனவரும். 20. ஈமத்து நல்லோள் கணவனொடு நளியழற்புகீஇச் சொல்லிடையிட்ட மாலைநிலைக்குச் செய்யுள்:- "சோலைமயி லன்னா டன்கணவன் சொல்லியசொல் மாலை நினையா மனங்கடைஇக்-காலைப் புகையழல் வேலோன் புணர்ப்பாகி நின்றா ளகையழ லீமத் தகத்து" [பு. வெ. சி. பொது. 8] எனவரும். இதனைப் பாலையென்று பாடமோதுவாரும் உளர்; அது பாடமன்மை உரையாசிரியர் உரையானும்மாலையீடென்னும் வழக்கானும் உணர்க. 21. கணவனொடுமுடிந்த படர்ச்சிநோக்கிச் செல்வோர் செப்பிய மூதானந்தத்துக்குச் செய்யுள்:- "ஓருயி ராக வுணர்க வுடன்கலந்தார்க் கீருயி ரென்ப ரிடைதெரியார்-போரில் விடனேந்து வேலாற்கும் வெள்வளையி னாட்கு முடனே யுலந்த துயிர்" [பு. வெ. சி. பொது. 9] எனவரும். ஆனந்தம் - சாக்காடு. மூதானந்தமென்றார் உழுவலன் பற்றி இறத்தலின். (பா - ம்.) * லவணொழிய. |