22. கொடியான் கூர்ங்கணை குளிப்பத்தன்றொழில் முடியானவிந்த
அத் துறைப்பகுதிக்குச் செய்யுள்:-
“முந்தத்தான் மாவொடு புக்கு முனையமருட்
சிந்தத்தான் வந்தார் செருவிலக்கிக்-குந்தத்தாற்
செல்கணை மாற்றிக் குரிசில் சிறைநின்றான்
கொல்கணைவாய் வீழ்தல் கொடிது”
[பு. வெ. சி. பொது. 10]
எனவரும். சிறை - கரை.
23. ஆடமைத்தோளி விரிச்சியுஞ்சோகியும் வேறுபட வஞ்சி
விதும்பா னந்தத்திற்குச் செய்யுள்:-
“வேந்தார்ப்ப வெஞ்சமத்து வேலழுவந் தாங்கினான்
சாந்தா ரகலத்துத் தாழ்வடுப்புண்-டாந்தணியா
மன்னா சொகின மயங்கின வாய்ப்புளு
மென்னாங்கொல் பேதை யினி” [பு. வெ. சி. பொது. 11]
எனவரும்.
24. தவப்பெரியதோர் வெஞ்சமங்குறுகும் அவற்கிரங்கிய
அத்துறைப் பகுதிக்குச்
செய்யுள்:-
“*இன்னா சொகின மிசையா விரிச்சியு
மன்னா வலமருமென் னாருயிரு-மென்னாங்கொ
றொக்கார் மறமன்னர் தோலாத் துடிகறங்கப்
புக்கான் விடலையும் போர்க்கு”
[பு. வெ. சி. பொது. 12]
எனவரும்.
25. தலைவன்விண்புக உயிர் தாங்கினனென்றணங்கு
அலமரலெய்திய ஆனந்தப்பையுளுக்குச்
செய்யுள்:-
1
“புகழொழிய வையகத்துப் பூங்கழற் காளை
திகழொளிய மாவிசும்பு சேர-விகழ்வார்முன்
கண்டே கழிகாத லில்லையாற் கைசோர்ந்து
முண்டே யளித்தென் னுயிர்” [பு. வெ. சி. பொது. 13]
எனவரும்.
26. கொடித்தேர் மன்னவன் மாய்ந்தெனக்குறைவுற்று அடுத்தோர்
புலம்பிய கையறுநிலைக்குச்
செய்யுள்:-
2
(பா - ம்.) * இன்னாத சோகி.
1 புறநா. 228, 229 முதலிய 5 பாடல்கள்.
2 ” 65, 112 - 120 முதலிய 41 பாடல்கள். |