“தாயன்னான் றார்விலங்கி வீழத் தளர்வொடு
நீயென்னாய் நின்றாயென் னெஞ்சளியை-யீயென்றார்க்
கில்லென்ற றேற்றா விகல்வெய்யோன் விண்படரப்
புல்லென்ற நாப்புலவர் போன்று” [பு. வெ. சி. பொது. 14]
எனவரும்.
27. கழிந்தோன்றன்புகழ் காதலித்துரைத்த மொழிந்த மற்றதன்
பகுதிக்குச்
செய்யுள்:-
“நின்று நிலமிசையோ ரேத்த நெடுவிசும்பிற்
சென்று கழிந்தான் செருவெய்யோ-னென்று
மழலுங் கதிர்வே லவன்புகழ் பாடி
யுழலு முலகத் துயிர்”
[பு. வெ. சி. பொது. 15]
எனவரும்.
28. *ஏதமிலறமுதல் இயல்பிவையென்னும் மூதுரைபொருந்திய
முதுமொழிக் காஞ்சிக்குச் செய்யுள்:-
1
“ஆற்றி னுணரி னருளறமா மாற்றார்க்குப்
போற்றார் வழங்கிற் பொருள்பொருளா-மாற்றிப்
புகலா தொழுகும் புரிவளையார் மென்றோ
ளகலா தளித்தொழுக லன்பு”
[பு. வெ. கா. பொது. 1]
எனவரும்.
29. மாற்றருங்கூற்றம் வருமுனந்தீதொரீஇப் போற்றுமினன்றெனப்
புகல்பெருங் காஞ்சிக்குச்
செய்யுள்:- 2
“ஆயா தறிவயர்ந் தல்லாந் தகலிடத்து
மாயா நிதிய மனைச்செறீஇ-யீயா
திறுகப் பொதியன்மி னினறொடு நாளைக்
குறுக வருமரோ கூற்று” [பு. வெ. கா. பொது. 2]
எனவரும்.
30. மேதகுமுனிவர் விளம்பிய நெறிமுறை போதகவென்ற
பொருண்மொழிக் காஞ்சிக்குச் செய்யுள்:-
* பு. வெ. மாலை யாசிரியர் இது முதல் காஞ்சிப் பொதுவியல்
என்பர்.
1 முதுமொழிக் காஞ்சி 1-100 (பதினெண் கீழ்க்கணக்கு நூல்)
புறநா. 18, 27-29 74.
2 ” 194, 357, 359, 360, 362-366.
” 5, 24, 75, 121, 182, 183, 185, 193, 195, 214. |