பக்கம் எண் :

96 இலக்கணவிளக்கம் - புறத்திணையியல்

 

     “ஆய பெருமை யவிர்சடையோ ராய்ந்துணர்ந்த
     பாய நெறிமேற் படர்ந்தொடுங்கித்-தீய
     விருளொடு வைகா திடம்படு ஞாலத்
     தருளொடு வைகி யகல்”
                  [பு. வெ. கா. பொது. 3]

எனவரும்.

    
31. நிலமிசையுலகின் நெறிமைகூறிய புலவரெய்தும்
புத்தேணாட்டுக்குச்
செய்யுள்:-

    
“பொய்யில் புலவர் புரிந்துறையு மேலுலக
     மையமொன் றின்றி யறிந்துரைப்பின் வெய்ய
     பகலின் றிரவின்று பற்றின்று துற்றின்
     றிகலின் றிளிவரவு மின்று”
                [பு. வெ. கா. பொது. 4]

எனவரும்.

    
32. தலைவரும்பொருளைத் தக்காங்குணர்த்தி நிலையாமை யுரைத்த
நீள்முதுகாஞ்சிக்குச்
செய்யுள்:-

    
“இளமை நிலைதளர மூப்போ டிறைஞ்சி
     யுளமை யுணரா தொடுங்கி-வளமை
     வியப்போவ லில்லா வியலிடத்து வெஃகா
     துயப்போக லெண்ணி னுறும்”
              [பு. வெ. கா. பொது. 5]

எனவரும்.

    
33. மலர்தலையுலகத்து மரபுநன்கறியப் பலர்செலச்செல்லாக் காடு
வாழ்த்துக்குச்
செய்யுள்:- *

    
“முன்புறந் தான்காணு மிவ்வுலகை யிவ்வுலகிற்
     றன்புறங் கண்டறிவார் தாமில்லை-யன்பி
     னழுதார்கண் ணீர்விடுத்த வாறாடிக் கூகை
     கழுதார்ந் திரவழங்குங் காடு”
             [பு. வெ. கா. பொது. 6]

எனவரும்.

    
34. 1 துவர்வாய்ப்பேதையைத் தோய்ந்து காதலன் கவலையிலே
மெனக்கழறிய முல்லைக்குச்
செய்யுள்:-

    
“ஊதை யுளர வொசிந்து மணங்கமழுங்
     கோதைபோன் முல்லைக் கொடிமருங்குற்-பேதை
     குவைஇ யிணைந்த குவிமுலை யாகங்
     கவைஇக் கவலை யிலம்”
                 [பு. வெ. முல். பொது. 1]

எனவரும்.

  
* புறநா. 356.
   1 இதுமுதல் முல்லைப்பொதுவியல் என்பர் பு. வெ. ஆசிரியர்.