| 
				
					| 
						| 
     விலக்கியல் வேற்றுமை வருமாறு: 
    "தம்மால் பயன்தூக்காது, யாவரையும் தாங்கினும்,	கைம்மாறும் காலம் உடைத்துஅன்றே; - எம்ஆவி
 அன்னவனை, ஆழிஅந பாயனை, அலராள்
 மன்னவனை, மானுமோ வான்?"
 
 என வரும்.      [எம் உயிர்போல்பவனும, ஆணைச் சக்கரத்தை உடையவனாய் அபாயம் இன்றிஇருப்பவனும், திருமகள் தலைவனும் ஆகிய சோழமன்னனைப் போலக் கைம்மாறு
 கருதாமல் எல்லோரையும் காப்பாற்று இயல்பை உடைய வானம், உதவி செய்ததற்கு
 ஒரு காலவரையறை உடைத்து ஆதலின், காலவரையறையின்றி எஞ்ஞான்றும் உதவும்
 எம்அநபாயனை ஒவ்வாது - என்ற இப்பாடலில்,
      பயன் தூக்காது யாவரையும் தாங்கும் திறத்தில் வானம் சோழனை ஒக்கும் என்றுகூறிப் பின் காலவரையறைறின்றி எஞ்ஞான்றும் உதவும் சோழற்குக்
 காலவரையறையோடு உதவும் மேகம் ஒப்பாகாது என்று விலக்கியவாறு காண்க.]
 
     சிலேடை வேற்றுமை வருமாறு: 
    "ஏறுஅடர்த்து, வில்முருகி, எவ்வுலகும் கைக்கொண்டு,மாறுஅடர்ந்து ஆழி வலவனைக், - கால்தொழுதற்கு
 எஞ்சினார் இல்எனினும், மாயன், இகல்நெடுமால்;
 வஞ்சியான், நீர்நாட்டார் மன்"
 
 என வரும்.                                                         (33)       [திருமாலும் சோழனும் செயலால் ஒப்பர் எனினும், திருமால்மாயன்; சோழன்வஞ்சியான் என வேற்றுமை செய்தவாறு, இதன்கண் அமைந்துள்ள சிலேடை
 பின்வருமாறு. திருமால் கண்ணனாய் நப்பின்னைக்காக ஏழு காளைகளையும் ஒரே
 நேரத்தில் அடக்கி அழித்தான்; இராமனாய்ச் சீதைக்காக வில்லை ஒடித்தான்;
 | 
 |  |