பக்கம் எண் :

 234

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

 தேவர்கள் உய்யப் பேருரு எடுத்து எவ்வுலகையும், கைக்கொண்டான்;அடியார்களுக்குப்
 பகைவர் ஆயினாரை அழித்த சக்கராயுதத்தை ஏந்திய வல்லவன் ஆவான்.

     சோழன், பாண்டியனுடைய மீனேற்றுக் கொடியையும், சேரனுடைய
 வில்கொடியையும் வென்று எல்லா நாடுகளையும் கைப்பற்றிப் பகைவர்களை அழித்த
 ஆணைச் சக்கரத்தை உடைய வல்லவன் ஆவான்.

     இருவரையும் நன்மக்கள் யாவரும் வணங்குகின்றனர். ஆனால் திருமால்
 மாயன் (கருநிறமுடையவன், வஞ்சனை செய்பவன்) புனல்நாட்டு மன்னனாகிய சோழன்
 வஞ்சியான் (கருவூரை உடையவன்; பிறரை வஞ்சித்தலை அறியாதவன்)

     "ஏறடர்த்து..........இல்" - சிலேடையான் ஒப்புமை கூறிப் பின் மாயன், வஞ்சியான்
 எனச் சிலேடையான் வேறுபடுத்தவாறு]

33 

விபாவனையணி

 653. உலகுஅறி காரணம் ஒன்றுஒழித்து உரைப்புழி,
      வேறுஒரு காரணம், இயல்பு, குறிப்பின்,
      வெளிப்பட உரைப்பின், அது விபாவனை ஆகும்.

 இது நிறுத்தமுறையானே விபாவனை அலங்காரம் கூறுகின்றது.

     இ-ள் :   ஒன்றன் வினை உரைக்குங்கால் அவ்வினைக்குப் பலரும் அறியவரும்
 காரணத்தை ஒழித்துப் பிறிது ஒரு காரணத்தினை இயல்பினான் ஆக., குறிப்பினான்
 ஆக வெளிப்பட உரைப்பது விபாவனை என்னும் அலங்காரம்ஆம் என்றவாறு.