இது நிறுத்தமுறையானே, அதிசய அலங்காலத்தின் பொது விதியும் அதன்விரியும்
 கூறுகின்றது.
     இ-ள் :   கவியால் கருதப்பட்ட ஒரு பொருளது வனப்பு மிகுத்துச் 
 சொல்லுங்கால், உலகநடை இறவாத தன்மைத்துஆகி, உயர்ந்தோர் வியப்பத் 
 தோன்றுவது அதிசயம் என்னும் அவங்காரமாம். பொருள் அதிசயம் 
 முதலிய தெளிவுபெறத் தோன்றும் அறுகூற்று விரியினை உடைத்தாம் 
 அவ்வலங்காரம் என்றவாறு.
     [இஃது உயர்வு நவிற்சியணி எனவும், மிகைமொழி எனவும், பெருக்கு எனவும்
 பெயர் பெறும்.]