இது நிறுத்த முறையானே நுட்பம் என்னும் அலங்காரம் ஆமாறு கூறுகின்றது.
     இ-ள் : தெரிந்து வேறுபடக் கிளவாது, குறிப்பினான் ஆதல், தொழிலினான்
 ஆதல், அரிதாக நோக்கி உணரும் தொழில் தன்மையை உடையது நுட்பம் என்னும்
 அலங்காரமாம் என்றவாறு.
     [இவ்வணி நுணுக்கம் எனவும் பரிகரம் எனவும் பெயர் பெறும்.]