இது பிறர் மதம் பற்றி மேலதற்கு ஓர் ஒழிபு கூறுகின்றது.
இ-ள்: ஒன்றனைப் புகழ்ந்தாற்போலப் பழித்து உரைத்தலும், பழித்தாற்போலப்
புகழ்ந்து உரைத்தலும் என்னும் இவ்விரண்டும் அவ்விலேசத்தின் பாற்படும் என்று
கூறுவாரும் உளர் என்றவாறு.
[இக்கருத்து மான் அலங்காரத்தில் குறிப்பிடப்டவில்லை. இச்செய்திகள்
நிந்தாத்துதி அலங்காரம், புகழ்வதின் இகழ்தல் அலங்காரம் என இருவேறு
அணிககாக அந்நூலுள் சுட்டப்பட்டுள்ளன.]