பக்கம் எண் :

 அணியியல் - இலேசவணி

275 

     தலைவன் காமநுகர்ச்சியில் தன்வசம் இழந்த சுவைஞன் என்ற கருத்து
 பெறப்படவைத்தவாறு காண்க.

     இது பழிப்பது போலத் தலைவனுடைய காம நுகர்ச்சியின் மிகுதியைப்
 புலப்படுத்தியதாம்.

    இப்பபடல் இரண்டும் பெருந்திணைத்தலைவியின் கூற்றாகக் கொள்க.]        43

நிரல்நிறையணி

 663. நிரல்நிறை முன்னர் நிகழ்த்தியாங்கு இயலும்.

   இது நிறுத்த முறையானே நிரல்நிறை அலங்காரம் ஆமாறு மாட்டெறிந்து
 உணர்த்துகின்றது.

     இ-ள்: நிரல்நிறையது இலக்கணம் ஆண்டுச் சொல்லதிகாரத்துக்
 கூறினாற்போல நடக்கும் ஈண்டும் என்றவாறு.

     ஆண்டுச் சொல்லதிகாரத்துக் கூறியவாறு :

    "பெயரும் வினையும்ஆம் சொல்லையும் பொருளையும்
     வேறு நிரல்நிறீஇ முறையினும் எதிரினும்
     நேரும் பொருள்கோள் நிரல்நிறை நெறியே"               - இ. வி. 364 

 என்பதாம்.

     [நிரல்நிறை -- வரிசையாக நிறுத்துதல்.

ஒத்த நூற்பாக்கள்

    "நிரல்நிறுத்த இயற்றுதல் நிரல்நிறை அணியே."               - தண்டி, 67 

    "நிரல்நிறை யாவது சொல்லும் பொருளும் நிரனிறுத்தல்."         - வீ. 170 

    "குறித்திடும் பெயர்வினை கூறிய செய்யுளின்
     நெறிப்பட நிரல்உறல் நிரல்நிறை ஆகும்."                     -மா. 162