பக்கம் எண் :

 288

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

ஒத்த நூற்பாக்கள்

முழுதும் - தண்டி 72

    "பரியாயம் ஓர்பொருள் தோன்றப் பிறிது பகர்தலென்னே."       - வீ. 170 

    "தொன்மையின் ஒருபெபருள் தொடர்பவம் பலவயின்
     பன்முறை பயின்றது எனல்பரி யாயம்."                       - மா. 198 

    "கருதியது கிளவாது அப்பொருள் தோன்றப்
     பிறிதொன்று கிளப்பதும் பரியாயம் ஆகும்."                  - மா. 199 

    "தான்கரு தியபொருள் தனைக்கூ றாதப்
     பொருள்புலப் படப்பிறிது ஒன்றனைப் புகல்வது
     பரியா யப்பெர் பகரப் படுமே."                       - மு. வீ. பொ. 91 

    "நினைத்த பொருளை நேரிதின் புகலாது
     மற்றொரு திறத்தான் வழங்குதல் வஞ்சனை
     தன்னான் இட்ட சாதனை என்றிரு
     பெற்றியது என்ப பிறிதின் நவிற்சி."                           - ச. 54 

    "கருது பொருளுக்கு உரித்தாம் விதத்தின்றிக் காட்டல்மற்றை
     ஒருவிதத் தெண்ணில் பிறிதின் நவிற்சி."                  - குவ. அ. 29 

     வரலாறு :

    "மின்நிகர்ஆம் மாதே ! விரைச்சாந் துடன்புணர்ந்து
     நின்நிகர்ஆம் மாதவிக்கண், நின்றுஅருள்நீ ; -- தன்நிகராம்
     செந்தீ வரமலரும் செங்காந்தள் போதுடனே
     இந்தீ வரம்கொணர்வல் யான்"

 என வரும்.                                                        (48) 

     [மின்னலை ஒத்த பெண்ணே ! நறுமணம் கமழும் சந்தன மரத்தில் படர்ந்து
 உன்னை நிகர்த்து அழகோடு காணப்படும் குருக்கத்தியின் நிழலிலே நீ தங்கியிரு.
 சிவந்த தீப்போல மலர்ந்து தமக்குத் தாமே நிகராகும் செங்காந்தன் பூக்களையும்