பக்கம் எண் :

 அணியியல் - பரியாயவணி

289 

 குவளை மலர்களையும் யான் பறித்து வருகிறேன் - என்று தோழி தலைவியைக்
 குறியிடத்து உய்த்து நீங்கும் செய்தியைக் கூறம் இப்பாடலில்.

     சந்தன மரத்தில் படரும் குருக்கத்தி போல, நீ தலைவனைத் தழுவுதற்கு உரிய
 வாய்ப்பினை நினக்கு நல்கி யான் பிரிந்து போய், நின் ஒப்பனைக்கு ஆம்
 மலர்களைப் பறித்து வருவேன் என்ற கருத்தைக் குறிப்பால் பெறப்பட வைத்த
 குறிப்பெச்சச் செய்தி இவ்வணியாமாறு காண்க.

     பரியாயம் - நேரிடையாகக் கூறாது சாமர்த்தியமாகக் கூறும் செய்தி.

    "நாணவும் நடுங்கவும் நாடாள் தோழி
     காணுங் காலைத் தலைமகள் தேஎத்து"              - இளை. அக. மேற். 

     ஆதலின் தோழி குறிப்பால் செய்தி அறிவித்தவாறு. பரியாய அணிக்கு மாறன்
 அலங்காரம் பிறிதோரிலக்கணமும் கூறும்.]                                48 

சமாயிதவணி

 668. முந்துதாம் முயல்வுறு தொழிற்பயன் பிறிதுஒன்று
      தந்ததா முடிப்பது சமாயிதம் ஆகும்.

     இது நிறுத்தமுறையானே சமாயித அலங்காரம் ஆமாறு கூறுகின்றது.

     இ-ள் : முன்பு தம்மால் முயலப்பட்ட தொழிலது பயன் அத்தொழிலான்
 அன்றிப் பிறிது ஒன்றான் நிகழ்ந்ததாகச் சொல்லுவது சமாயிதம் என்னும்
 அலங்காரமாம் என்றவாறு.

     [இஃது எளிதின் முடிவணி எனவும் துணைப்பேறிணி எனவும் பெயர் பெறும்.

      37-38