அணியியல் - உதாத்தவணி
291
உதாத்தவணி
669. வியத்தகு செல்வமும் மேம்பாம் உள்ளமும் உயர்ச்சி புனைந்து உரைப்பது உதாத்தம் ஆகும்.
இது நிறுத்தமுறையானே உதாத்தம் அலங்காரம் ஆமாறு கூறுகின்றது.
இ-ள் : வியக்கத்தக்க செல்வத்தும் மேம்பட்ட உள்ளத்தும் உயர்ச்சியை மிகுத்துச் சொல்லுவது உதாத்தம் என்னும் அலங்காரமாம் என்றவாறு,
ஒத்த நூற்பாக்கள்
முழுதும் - தண்டி 74
"தீங்கில் உதாரதை செல்வமும் உள்ளமும் சீர்மைசெப்பல்." - வீ. 171
"உயர்வற உயர்ந்ததை வியந்துரைக் குமதே மயர்வற உதாத்தம் எனவகுத் தனரே." - மா. 238
"அதுவே, பொருள்கொடை காந்தி பொற்புற கற்பே பெருவிறல் செல்வமென் பவற்றொடும் பெருகும்." - மா. 239
"அவற்றுள், பொருளினை மிகுத்துரைப் பதுபொருள் மிகுதி." - மா. 240
"கொடைநலன் விதந்துரைப் பதுகொடை மிகுதி" - மா. 241
"காந்தியை மிகுத்துரைப் பதுவே காந்தி." - மா. 242
"காமர்கற்பு உரைப்பது கற்பின் மிகுதி." - மா. 243
"நயம்புணர் ஞானவீ ரியம்அமர் வீரமென்(று) இயம்பிய விறலும் ஒரிரண் டென்ப." - மா. 244
"கல்விச் செல்வமும் கவின்பொருள உடைமைச் செல்வமும் எனஇரு திறத்தவாம் செல்வம்" - மா. 245