| 
				
					| 
						| 
    "உதாத்தம் பொருளில் பதார்த்தம் மிகலே."               - தொ. வி. 355  
    "ஆக்கத் துயர்வும் அகத்தின துயர்வும்மிகுதி யாக விளம்புவது உதாத்தம்"                   - மு. வி. பொ. 92
 
    "செல்வ மிகுதியை ஆதல் செப்புறும்அருங்கதை புகழ்பொருட்டு அங்கமா யாதல்
 கூறுவது வீறு கோள்அணி என்ப."                            - ச. 121
 
    "தங்கும் நிறைவின் வரலாற்றை மேற்சரி தம்புகழ்தற்குஅங்கம் உறலைச் சொலல்வீநு கோளணி."               - கு. வ. அ. 95
 
     [இஃது உதாரதை எனவும் வீறுகோளணி எனவும் கூறப்படும்.] 
     செல்வமிகுதி வருமாறு : 
    "கன்றும் வயவேந்தர் செல்வம் பலகவர்ந்தும்,என்றும் வறியோர் இனம்கவர்ந்தும், -- ஒன்றும்
 அறிவுஅரிதாய் நிற்கும் அளவினதால் அம்ம
 செறிகதிர்வேல் சென்னி திரு"
 
 என வரும்.      [ஒளிவீசும் வேலை ஏந்திய சோழ மன்னனுடைய செல்வம், தன்னை எதிர்த்தவலிய வேந்தர்களுடைய செல்வம் பலவற்றையும் கவர்ந்து வருவதால் பெருகியும்,
 நாடோறும் இரவலர் கூட்டம் பரிசு பெற்றுச் செல்வதால் சுருங்கியும், வரவும் செலவும்
 இன்ன இன்ன என்று அறியமுடியாத இயல்பினதாய் உள்ளது -- என்ற இப்பாடலில்,
 சோழனுடைய வீரச் செல்வமும், கொடைச்  செல்வமும் மிகுத்துக் கூறப்பட்டவாறு
 காண்க.]
 
     உள்ளமிகுதி வருமாறு : 
    "மண்அகன்று, தன்கிளையின் நீங்கி, வனம்புகுந்து,பண்ணும் தவத்துஇயைந்த பார்த்தன்தான், -- எண்இறந்த
 மீதுஅண்டர் கோன்குலையும் வெய்யோர் குலம்தொலைத்தான்,
 கோதண்ட மேதுணையாக் கொண்டு"
 
 என வரும். பிறவும் அன்ன.                                           (50)  | 
 |  |