[நாட்டையும் விடுத்து உறவினரையும் நீத்துக் காட்டை அடைந்து கடுமையான
தவத்தில் ஈடுபட்ட பார்த்தனாகிய அருச்சுனன், தன் வில்லையே துணையாகக் கொண்டு
தான் ஒருவனாகவே இருந்து, இந்திரனைத் துன்புறுத்திய நிவாத கவச காலகேயர்களின்
கூட்டத்தை அழித்தான் -- என்ற இப்பாடல், தவம்செய்து உடல் நலிந்த நிலையிலும்
அருச்சுனனுடைய உள்ளக் கிளர்ச்சியால் ஏற்பட்ட வீரவெற்றி பற்றி விளம்புமாறு
காண்க.
மாறனலங்காரம் உதாத்தத்தின் பல கூறுகளையும் விரித்துக் கூறும்.] 50