பிறவற்றின்கண் வருவனவும் வந்துழிக் காண்க. (51)
[தேன் பொருந்திய மாலையை அணிந்த, பெண்ணின் அழகினைத் தன்
காட்சியால் கவர்ந்து பின் தன்தண்ணளியான் மீட்டும் தாராத வீரம்மிக்க இவ்வரசன்
வஞ்சியான் அல்லன், (வஞ்சிக்காமல் இரான் ; கருவூர் என்ற ஓர்ஒரையே உடையவன்
அல்லன்). நெறிமுறை தவறாது நாடாண்டு பரந்த சேர சோழ பாண்டிய கொங்கு
தொண்டை நாடுகள் அனைத்தையும் காத்தல் தொழிலைச் செய்யும் அரசன் ஆவான்
என்ற இப்பாடலில்,
"வஞ்சியான் அல்லன்" என்ற தொடர் சிலேடைப பொருளால் குணஒழிப்பினைச்
கட்டியவாறு காண்க.] 51