என வரும். வனம் - நீரும் காடும்; புண்டரிகம் - தாமரையும் புலியும்; வனம் -
வண்ணமும் காடும்; கரி - கரியும் யானையும்; அரி - செவ்வரியும் சிங்கமும்; சிதறல் -
பரத்தலும் உடைத்தலும். (56)
விரிந்த மலர்கள் சூடிய மெல்லிய கூந்தலை உடைய இத் தலைவியின் விழிகள்
மான்களின் விழியோடு மாறுபடும் அளவின; இவை நீரில் வாழும் தாமரையைத் தம்
வனப்பால் தோற்கடிப்பன; கருநிறத்தோடு அரிகள் பரந்து எம்மைக் கோபிப்பன -
என்பது உரிய பொருள்.
சொற்களைக் கொண்டு நோக்குமிடத்து, இவள் விழிகள் மான்கள் பகைக்குமாறு
எளிய எனினும் காட்டிலுள்ள புலிகளை வாட்டும்; காட்டில் உள்ள யானைகளின்
வடிவத்தைக் கொண்டு சிங்கங்கள் சிதறி ஓடுமாறு கோபிக்கும் - என்ற முரண்பட்ட
பொருள் சிலேடை முகத்தான் மேம்போக்காக அமைந்திருத்தல் காண்க. ஏனைய
விகற்பங்களை மாறன் அலங்காரத்தில் காண்க.] 56