மன்மதனை வென்ற சிவபெருமானுடைய சடையில் தங்கி யிருக்கும் பிறைமதியும் கங்கையும் தாம் ஒரு பிம்பத்தையே வழங்கி, அச்சிவபெருமான் அணிந்த அஞ்சத்தக்க பருத்த வாயை உடைய பாம்புகளின் படங்களில் உண்டாகிய மணிகள் தோறும், தத்தம் உருவம் பிரதிபிம்பிப்பதால், பல பிம்பங்களை உடையவாயின - என்ற இப்பாடலில்,
ஒரு பிம்பத்தைக் கொடுத்துப் பல பிம்பங்களைப் பெறுதல் பரிவருத்தனையாகும். இதற்கும் பரிவிருத்திக்கும் உள்ள சிறு வேறுபாட்டினைப் பிற்சேர்க்கையில் காண்க.] 61