பக்கம் எண் :

 அணியியல் - பாவிகவணி

333 

 அணியாம் என்பது அவர் கருத்து. ஒருங்கு என்பதே அன்றி மூன்று தாழிசையுள்
 மூன்று பொருள்கூறி "எனவாங்கு" என்பதொரு சொல்லான் முடிந்த வழியும் எனவாங்கு
 என்பதொரு மொழியில் "என" என்பது ஓர் அலங்காரம் எனல் வேண்டும் ஆகலான்
 அவ்வாறு வரையறுத்துக் கூறல் அமையாது என்பது. பிறவும் அன்ன.

     இனி, அவற்றைப் பொருள் உறுப்பு என்பதல்லது, அணி என்பவாயின்,
 சாத்தனையும் சாத்தனால் அணியப்பட்ட முடியும் தொடியும் முதலாயவற்றையும்
 வேறு கண்டாற் போல அவ்வணியும் செய்யுளின் வேறாகல் வேண்டும் என்பது.

     இனி, செய்யுட்கு அணி செய்யும் பொருட்படை எல்லாம் கூறாது, சிலவே கூறி
 ஒழியின், அது குன்றக்கூறலாம் என்பது. அவை யாவை எனின்,

    "அகன்அமர் கேள்வன் அகற்சிதீர்த் தற்கு
     மகவொடு புகுந்த மகவுநிலை எனாஅ
     மறுக்குங் காலை மறுத்துஉரை மொழியாது
     குறிப்புவேறு கொளீஇய குறிப்புநிலை எனாஅப்
     புலவிக் கண்ணும் போக்கின் கண்ணும்
     அமுதலும் அழாஅது உயங்கலும் என்றாங்கு
     இருவகைப் பட்ட மங்கலம் எனாஅப்
     புலம்புறு காலை அறிவொடு படாது
     புலம்புகொள வந்த செய்வினை எனாஅ
     இன்னோ ரன்ன பலபொருட் பகுதி
     நன்னெறிப் புலவர் நாட்டல்வகை உடைய"

 என்று ஒரு சூத்திரம் செய்யின் அவையும் அலங்காரம் எனப்படும் என்பது.

     அவற்றிற்கு உதாரணம் :

    "ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன்தலைத்
     தூநீர் பயந்த துணைஅமை பிணையல்"                     - அகநா. 5 

 என்பது மகவுநிலை.