பக்கம் எண் :

 336

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

 மாற்று என்றாற்போல்வன. இவை மந்திரவகையான் அன்றி வாளாது மக்களைச்
 செய்யுள்செய்வார்க்கு அகன் ஐந்திணைக்கும் மரபு அன்று என்பது கருத்து.
 அல்லாதார் இவைஎல்லார்க்கும் செய்தற்கு உரியன என இழியக் கருதி
 அன்னவகையான் வேறுசிலபெய்துகொண்டு அவற்றிற்கும் இலக்கணம் சொல்லுப.
 அவை இத்துணை என்றுவரையறுக்கலாகா; என்னை? ஒற்றை, இரட்டை, புத்தி,
 வித்தாரம் என்றாற்போல்வன பலவும்கட்டிக் கொண்டு அவற்றானே செய்யுள்
 செய்யினும் கடியலாகாமையின், அவற்றிற்குவரையறை வகையான் இலக்கணம் கூறலாகா
 என்பது.

    "ஐயைதன் கையுள் இரண்டுஒழித்துஎன் ஐம்பால்மேல்
     பெய்தார் பிரிவுஉரைத்தல் இல்லையால்"

 எனவும்,

    "கோடாப் புகழ்மாறன் கூடல் அனையாளை
     ஆடா அடகினுளும் காணேன்"                        - திணை. நூற். 4 

 எனவும் சொல்லுவார் சொல்லுவனவற்றுக்கெல்லாம் வரையறை இன்மையின்
 அவற்றுக்குஇலக்கணம் கூறார் பண்ணத்திப்பாற் படுப்பினல்லது, என்பது.

- தொ. பொ. 645 போ.] 

65 

      மடக்கு இலக்கணமும் வகையும்

 685. எழுத்தின் கூட்டம் இடைபிறிது இன்றிப்
      பெயர்த்தும்ஒரு பொருள்தரின் மடக்குஎனும் பெயர்த்து,அஃது
      ஓர்அடி முதலா நான்குஅடி காறும்
      சேரும் என்ப தெளிந்திசி னோரே.

      இது மேற்கூறிய இருவகைப்பகுதியுள் மடக்கினது பொது இயல்பும்
 அதன்வகையும் கூறுகின்றது.