பக்கம் எண் :

 38

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

 பலபாட்டாய் வருவனவற்றையும், பொருள் முதலிய நான்கினானும் பாட்டினானும்
 அளவினானும் தொகுத்துக் கூறுவதாம் என்றவாறு.

     ஒருவனால் உரைத்தன - திருவள்ளுவப்பயன் முதலியன.

     பலரான் உரைத்தன - நெடுந்தொகை முதலியன.

     இஃது இவ்வறுவகைத் தொகைக்கும் பொது இலக்கணம்.

     பொருளால் தொகுத்தன - புறநானூறு முதலியன.

     இடத்தால் தொகுத்தன - களவழி நாற்பது முதலியன.

     காலத்தினால் தொகுத்தன - கார்நாற்பது முதலியன.

     தொழிலால் தொகுத்தன - ஐந்திணை முதலியன.

     பாட்டால் தொகுத்தன - கலித்தொகை முதலியன.

     அளவால் தொகுத்தன - குறுந்தொகை முதலியன.

     "ஆகும்" என்றதனானே, பிறவாற்றான் பெயர்பெற்று வருவனவும் கொள்க.

(6) 

விளக்கம்

     தொகைநிலைச் செய்யுளாவது ஒரு செய்யுளுக்கும் அடுத்த செய்யுளுக்கும்
 எவ்விதத் தொடர்பும் இன்றி இருக்கும் பல செய்யுட்களின் தொகுப்பு. அத்தொகுப்பு
 முழுதும் ஒருவர் பாடிய பாடல்களாகவும் இருக்கலாம்; பலர் பாடிய பாடல்களின்
 தொகுப்பாகவும இருக்கலாம். அத்தொகுப்புப் பொருள் முதலிய அடிப்படையில்
 தொகுக்கப்படலாம். பிறவாற்றான் பெயர் பெற்றன - உறுப்பால் பெயர்பெற்ற
 நயனப்பத்து, பயோதரப் பத்து என்பன போல்வன.

     திருவள்ளுவப்பயன் - திருக்குறள்.