பக்கம் எண் :

 அணியியல் - மிறைக்கவி

403 

19. அக்கரச்சுதகம்

     அக்கரச்சுதகம் என்பது ஒரு பொருள் பயப்பது ஒரு சொல் கூறி, அச்சொல்லின்
 ஓரோர எழுத்தாக நீக்க வேறுவேறு பொருள்பயப்பது.

    ["ஒருபொருள் பயந்த ஒரு தொடர் மொழியாய்
     வருவதை ஓரெழுத் தாய்க்குறை வகுப்பில்
     சுருங்குபு பலபொருள் தோன்றுவ தாய
     அருங்கவி அக்கரச் சுதகம் ஆகும்."                          - மா.277 

    "ஒருபொருள் பயப்பது ஒருமொழி இருந்ததில்
     ஒவ்வோர் அக்கரம் ஒழிக்கவெவ் வேறு
     சொல்லும் பொருளும் தோன்றுவது ழுத்தழிவு
     ஆகும் என்மனார் அறிந்திசி னோரே."                - மு. வீ. சொ. 17] 

 வரலாறு :

    "பொற்றூணின் வந்தசுடர், பொய்கை பயந்த அண்ணல்
     சிற்றாயன் முன்வனிதை யாகி அளித்த செம்மல்
     மற்றியார்கொ லென்னில், மலர்தூவி வணங்கி, நாளும்
     கற்றர் பரவும் கனகாரி, நகாரி, காரி"

 என வரும்.

     [பொன் மயமான தூணில் வந்த சோதி நரசிம்மமூர்த்தியாகிய கனகாரி ; சரவணப
 பொய்கையில் தோன்றிய அண்ணல் கிரவுஞ்ச மலையை அழித்த முருகனாகிய நகாரி ;
 திருமால் பெண்வடிவில் சிவனோடு கூடிப் பெற்ற மைந்தன் சாத்தனாகிய காரி.

     இதன்கண் ஒவ்வொரெழுத்துக் குறைய வெவ்வேறு பெயராதல் காண்க.]

20. நிரோட்டகம்

     நிரோட்டகம் என்பது இதழ் முயற்சியால் பிறக்கும் மெய்யும் உயிரும்
 உயிர்மெய்யும் வாராமல் பாடுவது.