பக்கம் எண் :

 90

இலக்கண விளக்கம் - பொருளதிகாரம் 

     [உவமையாகும் பொருள் தொன்று தொட்டுச் சான்றோர் நடையில் பயின்று
 வருவதாக இருத்தல் வேண்டும் ஆதலில் ஒவ்வொரு திறத்திலும் உயர்ந்த பொருளே
 உபமானமாகக் கூறப்படல் வேண்டும்.

     சேர பாண்டிய சோழராகிய மூவரும் கூடி அரச அவையில் இருக்கும் தோற்றம்
 சிறந்து காணப்படுவது போலக் கூத்து, பாட்டு, கருவிஇசை மூன்றும் இயைந்து
 சிறக்கத்தோன்றும் என்பது சிறப்புப்பற்றி வந்த உவமை.

     "ஓவியம் போலச் சிறந்த இடம்" - என்ற தொடரில் நலன் (அழகு) பற்றி உவமை
 கூறப்பட்டது.

     ஒருவன் கண் போலச் சிறந்தான் - என்ற தொடரில் காதல் பற்றி உவமை
 கூறப்பட்டது. காதலாவது சிறப்பும் நலனும் இல்வழியும் இட்டுரைப்பதாம்.

     சிங்கத்தைப் போன்று பகைவருக்குத் துன்பம் தரும் வலிமையினை உடைய
 திருமாவளவன் - என்ற தொடரில் வலிமை பற்றி உவமை கூறப்பட்டது.

     பாம்பால் மறைக்கப்பட்ட சந்திரனைப் போலப் பசலையான் நெற்றி ஒளி
 மறைக்கப்பட்டது என்ற தொடரில் - பொலிவிழந்த நெற்றிக்குப் பாம்பினால் ஒளி
 இழந்த மதியான கீழ்ப்படுக்கப்பட்ட பொருள் உவமையாயிற்று.

     பண்பு தொழில் பயன் என்ற மூவகை உவமையும் தோன்றுவதற்குச் சிறப்பு நலன்
 காதல் வலி கிழக்கிடுபொருள் என்ற ஐந்தும் நிலைக்களமாகும் என்பதாம்.]

     "உய்த்துணர்வகைத்து" எனப்பட்ட உவமப்போலி ஆகிய உள்ளுறைஉவமமும்
 ஈண்டே வெளிப்படை