| முழுதும் - யா. வி. 55 | | | `வெண்பாத் தாழிசை வெண்டுறை விருத்தம்என்று இந்நான்கு; அல்லவும் முந்நான்கு என்ப.' | | | - அவிநயம் | | |
| `ஒத்தா ழிசை, துறை, விருத்தம், எனப்பெயர் வைத்தார் பாவினம் என்ன வகுத்தே.' | | | - மயேச்சுரம் | | |
| `விருத்தம் வியன்துறை தாழிசை என்று பொருத்து முறைமை மறுத்தல்; - விரித்துச் சிறுகாக்கை பாடினியார் செய்த முறையே மறுகாக்கை வைத்தார் வகுத்து.' `துறைதா ழிசைவிருத்தம் தூக்கன மூன்றே.' | | | - தொ. வி. 219 | 18 | |
வெண்பாவின் பொது இலக்கணம் |
728. | செப்பல் இசையன வெண்பா; மற்றவை அந்தடி சிந்தடி ஆகலும், அவ்வடி அந்தம் அசைச்சீர் ஆகவும், பெறுமே. | | | - தொ. வி. 219 | | |
இது நிறுத்தமுறையானே வெண்பா ஆமாறு பொது வகையான் உணர்த்துகின்றது. இ-ள் : செப்பல் ஓசையைத் தமக்கு ஓசையாக உடையனவாம், எல்லா வெண்பாவும்; அவ்வெண்பாக்களின் ஈற்றடி முச்சீர் ஆதலும், அவ்வீற்றடியின் இறுதி அசைச்சீரான் இறுதலும் பெறும் என்றவாறு. |
|
| `பாலொடு தேன்கலந் தற்றே பணிமொழி வாலெயி றூறிய நீர்' | | | - குறள் 1121 | | |
என நேர்அசைச் சீரானும், |
| `நன்றறி வாரின் கயவர் திருவுடையர் நெஞ்சத் (து) அவலம் இலர்' | | | - குறள் 1072 | | |
என நிரைஅசைச் சீரானும் இறுதலே அன்றி உம்மையால், |
|